கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளையும் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், இவ்வாறான சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (21-01-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் இதுவரை காய்ச்சல் போன்ற லேசான பக்கவிளைவுகள் மாத்திரமே பதிவாகியுள்ளது. கடுமையான உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு தீவிரமான நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருத்துவப் பணியாளர்களை நியமித்துள்ளதாகவும், எனவே தடுப்பூசி போடுவது தொடர்பில் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில், மீண்டும் ஒரு கொரோனா அலையைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்ற
கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளை
சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்
எதிர்வரும் தேர்தல்களில் புதிய கூட்டணியை அமைத்து, அதன்
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பத
சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட
இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில்
கிளிநொச்சியில் நேற்று (02) பிற்பகல் ஏற்பட்ட மினி சூ
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்க
வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா
ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ
பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையி
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
கந்தகாடு புனர்வாழ்வு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை ப
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க
