உங்களுடைய பைக்கை ரயில் மூலமாகவே வெளியூருக்கு ஈசியா அனுப்பமுடியும். அதற்கான முழு விவரம் மற்றும் விதிமுறைகள் இதுதான் வேலை அல்லது படிப்பு தொடர்பாக பல நேரங்களில் நாம் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு மாற வேண்டியிருக்கும்.
அந்த சூழலில் பைக் அல்லது ஸ்கூட்டர்களையும் நம்முடனேயே எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இதற்கு, இந்திய ரயில்வே உங்களுக்கு உதவுகிறது. ரயில் மூலமாக பைக்கை கொரியர் அனுப்புவது சுலபமான ஒன்றுதான். கட்டணமும் குறைவு. ரயிலில் பைக் அல்லது ஸ்கூட்டரை எப்படி அனுப்புவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ரயில்வே விதிமுறை!.
இந்திய ரயில்வே மூலமாக எந்தவொரு பொருளையும் கொண்டு செல்ல முடியும். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று கையிலேயே எடுத்துச் செல்வது. மற்றொன்று பார்சல். இந்த சேவையில் (பார்சல்) நீங்கள் விரும்பும் இடத்திற்கு பொருட்களை அனுப்ப முடியும். ஆனால் அதனுடன் நீங்கள் பயணிக்க முடியாது.
உங்களுடைய பைக்கை பார்சல் அனுப்ப முதலில் அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கு பார்சல் கவுண்டர் மூலம் பார்சல் தொடர்பான அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைக்கும். தகவல் கிடைத்ததும், அனைத்து ஆவணங்களையும் தயார் செய்ய வேண்டும். ஆவணங்களின் அசல் நகல் மற்றும் புகைப்பட நகல் இரண்டையும் வைத்திருக்க வேண்டும். சரிபார்ப்பின் போது அசல் நகல் தேவைப்படலாம். கடைசியாக பார்சல் செய்வதற்கு முன் உங்களுடைய பைக்கின் டேங்க் சரிபார்க்கப்படும்.
நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரத
டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப
கேரள மாநிலம் வயநாடு அருகே பனைமரம் பகுதியில் உள்ள ஆதிவ
ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை ச
வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.
இந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் சந்திய
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உ
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்
ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் நகரத்தின் பாபா மொஹல்லா என்ற இ
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவ
இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக
அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக ந
