More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்திய கடற்தொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு
இந்திய கடற்தொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு
Feb 24
இந்திய கடற்தொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்திய கடற்தொழிலார்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று காலை வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் ஜெ.கஜநிதிபாலனால் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



கடந்த 7ஆம் திகதி இரவு நெடுந்தீவு அருகே இந்திய கடற்தொழிலாளர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று படகுகளை கைப்பற்றியதுடன், அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.   



தொடர்ந்து குறித்த கடற்தொழிலாளர்கள் கடந்த 8 ஆம் திகதி கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரால் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் கடற்தொழிலாளர்களை 22ஆம் திகதிரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.



இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது சந்தேகநபர்கள் மன்றில் முற்படுத்தப்படாத நிலையில் கடற்தொழிலாளர்கள் சார்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரி ஒருவர் மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.



இதன்போது கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் குறித்த கடற்தொழிலாளர்களிடம் கோவிட் தொற்று அச்சம் காரணமாக வாக்கு மூலம் பெறவில்லை எனவும், ஆகவே சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதி வழங்குமாறும், அதுவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவானிடம் தமது விண்ணப்பத்தை கோரியிருந்தனர்.



இதனையடுத்து குறித்த 3 வழக்குகளின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதவான், கடற்தொழிலாளர்களிடம் வாக்குமூலம் பெற அனுமதியளித்ததுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் சந்தேகநபர்களை மன்றில் முற்படுத்துமாறும் உத்தரவிட்டார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun11

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்

Jul13

நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன

Aug12

கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டு

Jun12

முதல்-மந்திரி 

இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார

Aug13

சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகரா

May26

முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கார் உள்பட அனைத்து போக்குவ

May26

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந

Apr14

அண்ணல் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாளை ஒட்டி, திருச்சி ம

Jun20

லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட

Jul17

கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்

May26

சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம

Feb12

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக

Sep23

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தா

Oct02

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (15:33 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (15:33 pm )
Testing centres