தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 949 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நேற்றைய பாதிப்பு 1051 ஆக இருந்த நிலையில் இன்று 1000க்கு கீழ் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 44 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் குறைந்து, 223 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 136 பேருக்கும், செங்கல்பட்டில் 92 பேருக்கும், ஈரோட்டில் 47 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் புதிய பாதிப்பு பதிவாகி உள்ளது.
இன்று ஒரே நாளில் 3,172 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 91 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,980 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,938 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாள
கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதி
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட
தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடு
பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற
அதிமுக ஒ
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாத
எந்த வயதிலும் சாதிக்க முடியும் என்பது தான் பழமொழிக்கு
தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர
மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளி
இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ
சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு பரோ
சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை ப
