வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இந்திய அணியில் ரவி பிஷ்னோய், ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஷ் குமார், தீபக் சகார், சஹால் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதில் ரவி பிஷ்னோய் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இது குறித்து போட்டி நிறைவுக்கு பின்னர் தனியார் விளையாட்டு செய்தி நிறுவனத்திற்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
பிஷ்னோய் மிகவும் திறமையான பையன், அதனால்தான் நாங்கள் அவரை உடனடியாக அணியில் சேர்த்தோம். அவரிடம் வித்தியாசமான ஒன்றைக் காண்கிறோம். அவரிடம் நிறைய மாறுபாடுகள் மற்றும் திறமைகள் உள்ளன.
அவர் எந்த நிலையிலும் பந்துவீச முடியும், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. போட்டியை நாங்கள் சீக்கிரம் முடித்திருக்க வேண்டும், இந்த வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
இந்த ஆட்டம் அதிக நம்பிக்கையை தருகிறது. பந்து வீச்சாளர்களின் பெரும் முயற்சியால் அவர்களை(வெஸ்ட் இண்டீஸ்) குறைந்த ரன்களுக்கு கட்டுப்படுத்த முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந
பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இ
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ப
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலிக்கு 20 நாட்க
மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ
மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலத்தை வென்று கொடுத்துள
அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நா
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷே
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக
கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூ
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து
15-வது இந்திய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின
