அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்களை பெற பெண்கள் வேலைக்கு செல்லாமல் நாள் கணக்கில் வீட்டில் காத்திருப்பதாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பெண் வாக்காளர்களை கிண்டல் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நகர் புற உள்ளாட்சி தேர்தலில் கருமத்தம்பட்டி நகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “நகராட்சியில் வார்டு உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நிதியை முறையாக செயல்படுத்த பாஜகவினரை தேர்வு செய்ய வேண்டும், மத்திய அரசு வழங்கும் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டம், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் எளிதாக கிடைக்க பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு ஹாட் பாக்ஸ் வழங்கி வருகின்றன, அதனை பெற பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. எந்தக் கட்சி ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு பாஜகவினருக்கு வாக்களிக்க வேண்டும்.
மற்ற கட்சியை சார்ந்தவர்கள் வழங்கும் 300 ரூபாய் பரிசுப் பொருட்களை பெறுவதற்கு பெண்கள் 4 நாட்கள் வரை வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே காத்துக்கிடக்கின்றன. இதனால் 2,000 ரூபாய் வரை பெண்கள் சம்பளத் தொகையை இழக்கின்றனர்” எனக் கூறினார்.

இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய
சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த
பாமக நிறுவனர் ராமதாசின் 83-ஆவது பிறந்தநாள் இன்று . இதை மு
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் தயங்
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளாராக அற
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 76 இடங்களில் 10 ஆயிரத்து 50 பேரு
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங்
சர்வதேச ரீதியில் இன்று இலங்கை பேசுபொருளாக மாறியுள்
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச
2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பெரியவர்க
ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இன்று நடிகை
கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங
நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபை
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்
