அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சி தயாராகவே இருக்கின்றது. எனவே, தேர்தலை பிற்போடாமல் உரிய காலத்தில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
எந்நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆக, முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசுக்கு நாம் சவால் விடுக்கின்றோம். தேர்தலை சந்திக்க அச்சமில்லையெனில் எதற்காக உள்ளாட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படவேண்டும்.
அதேபோல சிறு சட்டத்திருத்தம் ஊடாக மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம். அதையும் அரசு செய்யாமல் இருப்பது ஏன்? அரசமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை ஜனாதிபதிக்கு நடத்த முடியும். அவ்வாறு நடத்தப்பட்டால் அந்த தேர்தல்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு இல்லை. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அரசுக்கு எதிரான ஆட்டத்தை ஓரணியாகவே எதிர்கொள்வோம். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே எமது ஜனாதிபதி வேட்பாளர்.” – என்றார்.
நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் ப
அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக நாடாளுமன்ற உற
இலங்கையில் மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான கொரோனாத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ வி
அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது என தமிழ்
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின
மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து
விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ
அரசாங்கத்திற்கு நட்டத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் ச
தற்போதைய கொரோனா பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
பரஸ்பர அன்பும், எல்லையில்லா சகோதரத்துவமும், நட்பு ரீத
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொட
தென்னாபிரிக்கா, பொட்ஸ்வானா, லெசோத்தோ, நம்பியாவ, சிம்பா
