அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சி தயாராகவே இருக்கின்றது. எனவே, தேர்தலை பிற்போடாமல் உரிய காலத்தில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
எந்நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆக, முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசுக்கு நாம் சவால் விடுக்கின்றோம். தேர்தலை சந்திக்க அச்சமில்லையெனில் எதற்காக உள்ளாட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படவேண்டும்.
அதேபோல சிறு சட்டத்திருத்தம் ஊடாக மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம். அதையும் அரசு செய்யாமல் இருப்பது ஏன்? அரசமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை ஜனாதிபதிக்கு நடத்த முடியும். அவ்வாறு நடத்தப்பட்டால் அந்த தேர்தல்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு இல்லை. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அரசுக்கு எதிரான ஆட்டத்தை ஓரணியாகவே எதிர்கொள்வோம். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே எமது ஜனாதிபதி வேட்பாளர்.” – என்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ந
மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிர
எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொட
கொடதெனியாவ வத்தேமுல்ல கிராம மக்களை சிலர் பீதியில் அழ்
பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகுமாறு எந்த அறிவித்த
முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பான தரவுகளை சேகரித்து எ
பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்
68 உறுப்பு நாடுகளைக் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (08) 24 கரட் தங்கப
நாடாளுமன்றத்தில் கட்டடத் தொகுதியில் நேற்று செய்தி சே
நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக
நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்ப
