இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய் மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டுகளைப் போலவே கடுமையான கோவிட் பரவலை எதிர்கொள்ளும் வகையில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்களுக்கும் மற்றொரு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.Multi System Inflammatory Syndrome எனப்படும் இந்த நோயினால் 5 வயது முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எதிர்வரும் வாரங்களில் நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்தால் இந்த பாதிப்பும் தீவிரமடையும் என லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நோய் ஏற்பட்டால் சிறுவர்கள் உயிரிழந்து விடுவதே இதன் பாரதுரமான விடயமாக பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலிப்பு, கை கால் செயலிழப்பு, நிமோனியா, சிறுநீரக செயலிழப்பு, வயிற்று வலி, கண்கள் மஞ்சள் நிறமாகுதல் போன்ற மாற்றங்கள் ஏற்படும்.
இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக, 4 நாட்களுக்கு காய்ச்சல், கடுமையான உடல்வலி, வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, கண் சிவத்தல், தோலழற்சி, உடல் மற்றும் நாக்கு சிவத்தல் போன்றவைகளாகும்.
எனவே, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் இந்த அறிகுறிகளைப் பற்றி பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அ
இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி
இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப
துபாயில் 9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண் தன
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்
இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை
நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர
இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும
