பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிம் அட்டைகளை பதிவு செய்வதை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீதியமைச்சர் அலி சப்ரி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
“சில நேரங்களில், ஒரு நபரின் பெயரில் பல சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலருக்கு தங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் அட்டைகள் இருப்பது கூட தெரியாது. இறந்த நபர்களின் கீழ் சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் உள்ளன.
எனவே, சிம் அட்டைகளை பதிவு செய்வதை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
எனவே உரிமையாளரின் அடையாளத்தை நேரடியாக அங்கீகரிக்க முடியும், ”என்று பொது பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட சட்டங்களை உருவாக்குதல் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
பொது பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மாதிரிகளின் கையிருப்புகளை அழிக்க வேண்டிய சட்டங்களை இயற்றுவது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்
கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு
மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்க
முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை
நாட்டில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ம
ஆட்சியாளர்கள் மற்றும் பிரபல அரசியல்வாதிகளின் ஊழல், மோ
இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்
மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வ
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெரு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்
வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர
தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்
