தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம்(10) மதியம் இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்ய அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த ஏலவிற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
தலைமன்னார் பியர் இறங்கு துறை பகுதியில் இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை செய்ய அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஏல விற்பனையில் கலந்து கொண்டு படகுகளைக் கொள்வனவு செய்ய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளடங்கலாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் வருகை தந்திருந்தனர்.
எனினும் அறிவிக்கப்பட்டது போன்று ஏல விற்பனை இடம் பெறவில்லை என வருகை தந்த கொள்வனவாளர்கள் தெரிவித்தனர்.
இன்று (10)காலை முதல் மதியம் வரை ஏல விற்பனைக்காகக் காத்திருந்த போதும் இறுதி நேரத்திலேயே குறித்த ஏல விற்பனை இடம் பெறாது என ஏற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தூர இடங்களிலிருந்து வருகை தந்த கொள்வனவாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந
இலங்கை தீவின் அரசியல் களம் இலங்கை - இந்திய அரசியல் உறவி
டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச
கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல
பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருக
கொரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகம் தாக்குமா என்பது குற
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதின
தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பா
மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப
