More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை
Feb 09
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை

நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  தெரிவித்த பதில் ஆகியவை தொடர்பில் நேற்று சபையில் சர்ச்சை ஏற்பட்டதுடன் அது சில நிமிடங்கள் நீடித்தது.



எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்துக்களை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ''கிசு கிசு''க்கள் என வர்ணித்ததால் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.



பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச 27இன்கீழ் 2இல் மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள் , நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நிதி அமைச்சரிடம் பல கேள்விகளை எழுப்பினார்.



அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விரைவில் அதற்கான பதிலை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.



அக்கேள்விகளுக்கு பதிலளிக்க சபையில் நிதி அமைச்சரோ ,நிதி இராஜாங்க அமைச்சரோ இல்லாதால் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதில் அளித்தார். அதன்போது 27 கீழ் 2 கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கும் எனினும்,எதிர்க்கட்சித்தலைவரின் ''கிசு கிசு''க்களுக்கு பதில் வழங்க முடியாது என்றார்.



அதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ,



மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள், நாட்டின் நிதிப்பற்றாக்குறை பிரச்சினைகள் அரசுக்கு ''கிசு கிசு''க்களாகிவிட்டனவா? அரசு மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ''கிசு கிசு''க்களாகத்தான் பார்க்கின்றதா எனக்கேள்வி எழுப்பினார்.



அதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளிக்கையில், எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும். ஏனையவை ''கிசுகிசு''க்களாக இருப்பதால் பதில் வழங்க முடியாது என்றே நான் கூறினேன் என்று குறிப்பிட்டார்.



நான் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை நிதியமைச்சரிடம் எழுப்பியுள்ளேன் . ஆனால் இக்கேள்விகளுக்கு பதிலளிக்க சபையில் நிதியமைச்சரோ, நிதி இராஜாங்க அமைச்சரோ இல்லை. நாட்டின் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் பொறுப்புடன் சபையில் இருக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May26

இன்று விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள்

Mar23

சீனாவின் டி.எம்.ஐ. தொழில்துறை குழுமத்தால் இலங்கைக்கு 3

Oct25

அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்

Sep07

ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எ

Aug29

எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிர

Jul18

ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழி

Mar24

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்து

Jan25

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரி

Jan19

வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை

Jan17

இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில்

Jul01

வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் ச

Jan21

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்

Mar09

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்

Sep06

தமது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங

Jun30

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (18:30 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 16 (18:30 pm )
Testing centres