More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை
Feb 09
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை

நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  தெரிவித்த பதில் ஆகியவை தொடர்பில் நேற்று சபையில் சர்ச்சை ஏற்பட்டதுடன் அது சில நிமிடங்கள் நீடித்தது.



எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்துக்களை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ''கிசு கிசு''க்கள் என வர்ணித்ததால் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.



பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச 27இன்கீழ் 2இல் மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள் , நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நிதி அமைச்சரிடம் பல கேள்விகளை எழுப்பினார்.



அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விரைவில் அதற்கான பதிலை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.



அக்கேள்விகளுக்கு பதிலளிக்க சபையில் நிதி அமைச்சரோ ,நிதி இராஜாங்க அமைச்சரோ இல்லாதால் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதில் அளித்தார். அதன்போது 27 கீழ் 2 கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கும் எனினும்,எதிர்க்கட்சித்தலைவரின் ''கிசு கிசு''க்களுக்கு பதில் வழங்க முடியாது என்றார்.



அதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ,



மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள், நாட்டின் நிதிப்பற்றாக்குறை பிரச்சினைகள் அரசுக்கு ''கிசு கிசு''க்களாகிவிட்டனவா? அரசு மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ''கிசு கிசு''க்களாகத்தான் பார்க்கின்றதா எனக்கேள்வி எழுப்பினார்.



அதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளிக்கையில், எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும். ஏனையவை ''கிசுகிசு''க்களாக இருப்பதால் பதில் வழங்க முடியாது என்றே நான் கூறினேன் என்று குறிப்பிட்டார்.



நான் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை நிதியமைச்சரிடம் எழுப்பியுள்ளேன் . ஆனால் இக்கேள்விகளுக்கு பதிலளிக்க சபையில் நிதியமைச்சரோ, நிதி இராஜாங்க அமைச்சரோ இல்லை. நாட்டின் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் பொறுப்புடன் சபையில் இருக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏ

Mar09

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்

Feb02

கொள்ளுபிட்டியில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தப்பட்டு

Apr03

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி த

Apr01

 மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச

Feb04

பெருந்தொற்றுச் சூழலில் சுதந்திர தின விழாவொன்று இடம்ப

Apr04

இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன

Jan27


எதிர்வரும் 31ம் திகதி வரை மின்சாரம் துண்டிக்கப்படாத

Feb01

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற

Sep22

யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள்

Aug11

நாட்டில் நாளொன்றில் அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று ப

Jun23

மருத்துவர்கள், சுகாதார நிபுணர்களின் வேண்டுகோளின்படி &

May03

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனம்  அர

Mar17

நாட்டில் தற்போது ஆங்காங்கே மக்கள் ஆர்ப்பாட்டங்களை செ

Jan26

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொட

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (05:58 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (05:58 am )
Testing centres