More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 8 வருடமாக கணவனுக்கு சாப்பாட்டில் மருந்து கொடுத்த மனைவி! விசாரணையில் வெளியான பகீர் தகவல்!
8 வருடமாக கணவனுக்கு சாப்பாட்டில் மருந்து கொடுத்த மனைவி! விசாரணையில் வெளியான பகீர் தகவல்!
Feb 08
8 வருடமாக கணவனுக்கு சாப்பாட்டில் மருந்து கொடுத்த மனைவி! விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப்பாட்டில் மனநிலை பாதித்த மருந்தை கலக்கி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சதீஸ்(38). இவரின் மனைவி ஆஷா(34) இவர்கள் முதல் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகரில் புதிதாக வீடு வாங்கி வசித்து வருகிறார்கள்.



தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவரது கணவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் தனது மனைவியை உடலளவிலும், மனதளவிலும், வன்கொடுமை செய்து வந்துள்ளார்.



இதனால், ஆத்திரமடைந்த மனைவி ஆஷா அவரை அடக்க வேண்டும் என மனநிலை பாதித்தவர்கள் சாப்பிட வேண்டிய மருந்தை அவரது சாப்பாட்டில் கலந்துகொடுத்துள்ளார். அன்று முதல் அவரது கணவரின் உடல்நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.



இதை ஆஷா கடந்த 8 வருடங்களாக செய்து வந்துள்ளார். இதனால் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த கணவர் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் வீட்டில் சாப்பிடாமல் ஹோட்டலில் சாப்பிடலாம் என முடிவெடுத்து, மூன்று வேளையும் ஹோட்டலில் சாப்பிட்டு வந்தார். அப்போது அவரது உடல் நிலையில் 20 நாட்களாக எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் இருந்துள்ளது.



அப்போது தான் அவர் வீட்டு சாப்பாட்டில் தான் ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை உணர்ந்துகொண்டார். பின்னர், மனைவியின் தோழி ஒருவரை கடந்த வாரம் சந்தித்து இந்த நிலைமையை எடுத்துக் கூறினார்.



அப்போது இந்த தோழி அவரின் மனைவி சாப்பாட்டில் கலக்கி கொடுக்கும் மருந்தைப் பற்றி தெளிவாக கூறியுள்ளார். உடனடியாக சதீஷ் தன் மனைவிமீது பாலா நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.



இதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவர் மனைவியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த 8 வருடமாக இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக உண்மையை ஒப்புக்கொண்டார்.



மேலும், தினசரி செய்த கொடுமையே என போலீசில் தெரிவித்தார். இதனையடுத்து அவரது வீட்டை போலீசார் பரிசோதித்தபோது ஒரு அறையில் பெட்டி பெட்டியாக மனநிலை பாதித்தவர்களுக்கு கொடுக்கப்படும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.



பின்னர், சதீஷின் மனைவி ஆஷாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul30

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்

Feb13

குர்கிராமில் நடைபெற்ற பணியாளர் அரசு காப்பீட்டு கழக (இ.

May26

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந

Feb05

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க

Mar27

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழ

Mar06

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்

Jun29
Aug06

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முய

Dec28

மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.ப

Sep25

தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் நடக்கும் ஊ

Jul16

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங

Apr23

பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம

May30

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வ

Mar13

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டண

Oct10

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு விசேட ஏற்பாட

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (18:46 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (18:46 pm )
Testing centres