வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதியில் இன்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வயல் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி வாழைச்சேனை பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் தியாவட்டவான் - மயிலங்கரைச்சை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய சீனித்தம்பி யோகராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் சடலமாக மீட்கப்பட்டவர், 15 நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றதாகவும், அவரை தேடி வந்ததாகவும் அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
இதன்படி வயலில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல
22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன
நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு ம
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைந
கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்
கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமை
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவே
மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு நிலைப்பாட்டி
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் ப
எனது பிள்ளை மிக சிரமம் எடுத்து படித்தும், அதன் பெறுபேற
