நிட்டம்புவை - பஸ்யாலை பிரதேசத்தில் இன்று வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபாய் பெறுமதியான பஜிரோ வண்டியை திருடிச் சென்றுள்ளதாக நிட்டம்புவை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிட்டம்புவை நகரில் வாகன விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரின் வாகனமே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ள திருடன், சாவிகள் மாட்டி வைக்கும் இடத்தில் இருந்து வண்டி சாவியை எடுத்து, பஜிரோவை கொள்ளையிட்டு சென்றுள்ளமை காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் போது தெரியவந்துள்ளது.
கொள்ளை நடந்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள் உறங்கியுள்ளனர். பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சியின்படி சந்தேக நபர் கொழும்பு - கண்டி பிரதான வீதி ஊடாக கொழும்பு திசை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.
மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னா
எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல்
தமிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுத
யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயண
யாழ்ப்பாணம் – கிளாலி மற்றும் கண்டி – கெட்டம்பே ஆகிய
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று ந
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு க
சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் ந
இலங்கையில், சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடுப்பு சட்டத்த
இலங்கையின் கட்சிகள் பெறும் வாக்குகளின் வீதம் தொடர்பி
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக தொடர்ந்து
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை ப
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம
