உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுடன் கோவா மாநிலத்திலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த முறை கோவா சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட உள்ளது.
இந்நிலையில், கோவா மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான லூய்சின்ஹோ பலேரோ இன்று எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். கட்சியில் இருந்தும் வெளியேற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசிய சில மணி நேரங்களில் அவர் காங்கிரசில் இருந்து விலகி உள்ளார்.
பிரதமர் மோடிக்கும் அவரது அதிகாரத்துக்கும் கடும் சவால் அளித்தவர் மம்தா பானர்ஜி. பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் 200 கூட்டங்களை நடத்தினார். அமித் ஷா 250 கூட்டங்களை நடத்தினார். அத்துடன், அமலாக்கத்துறை, சிபிஐ கெடுபிடியும் இருந்தது. ஆனால், மம்தா பார்முலா வெற்றி பெற்றுள்ளது’ என்று லூய்சின்ஹோ பேசியது குறிப்பிடத்தக்கது.
லூய்சின்ஹோ திரிணாமுல் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவரை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் மற்றும் பிரசன் பானர்ஜி ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர்.
கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட
2022/23 பெரும்போகப் பயிர்ச்செய்கைப் பர
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை த
மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்
குவாட் மற்றும் ஐநா மாநாட்டில் பங்கேற்க 4 நாள் சுற்றுப்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகர்ப் பகுதிகளில்
பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந்
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ
பாராலிம்பிக் உயரம் தாண்டுத
கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்
சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயல