இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் மிலிந்த மொறகொட இன்று தலைநகர் புதுடில்லியில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தனது நற்சான்றுப் பத்திரத்தைக் கையளித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சால் உரிய சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி காணொளி வடிவில் ஒளிபரப்பு செய்யக்கூடிய விதமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி இந்திய ஜனாதிபதி அவரது உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனிலிருந்து வெளிவிவகார அமைச்சுடன் இணைந்துகொண்டதையடுத்து, அவரிடம் மிலிந்த மொறகொட நற்சான்றுப்பத்திரத்தைக் கையளித்தார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சார்பில் இந்திய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் மிலிந்த மொறகொட, இந்தியத் தூதுக்குழு செயற்திட்டத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.


சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல
இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம
மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை பிரதி முகாமையாள
இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என
பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன
வெளிநாட்டு பணியாளர்களுக்காக, விமான நிலைய வளாகத்தில் எ
வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதால் உள
மினுவாங்கொடையில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப
மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதி
புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக
போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் ச
விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமைத்த குற்றச்சா
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்
