உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. எனினும் கொரோனா தடுப்பூசியின் பலனாக கடந்த பிப்ரவரி மாதத்துக்கு பிறகு அங்கு வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
இதனை தொடர்ந்து, ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெளிநாட்டு பயணிகள் அமெரிக்கா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன் இந்தியா, சீனா, ஈரான், இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் அந்த நாடுகளில் 14 நாட்கள் தங்கிய அமெரிக்க குடிமக்கள் அமெரிக்கா வருவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினரும், அமெரிக்க குடிமக்களும் அமெரிக்க வரலாம் என ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா வரும் வெளிநாட்டினர் அனைவரும் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் மற்றும் விமானம் ஏறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் (தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட சான்றிதழ்) கட்டயாமாக வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகள் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சமீப காலமாக பொது இடங்களில் துப்பாக்க
அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிற
உக்ரேனுக்குள் ரஷ்யா நுழைந்ததை அடுத்து நட்புறவு நாடுக
வெனிசுவேலாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை அமெரிக்காவி
உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகளுக்கு கட்டளை வ
சீனாவின் வுகான் நகரில் 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப
அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற
இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உ
இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்த
அமெரிக்காவின் இன்டியானாபொலிஸில் உள்ள வீடொன்றில் கர்
போப் பிரான்சிஸ் (வயது 84) குடல் பிரச்சினையால் அவதிப்பட்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நர்ஸ் ப
சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா,
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்
