More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • டிக்டாக் பிரபலம் திவ்யா சைபர் க்ரைம் போலீசாரால் கைது!..
டிக்டாக் பிரபலம் திவ்யா சைபர் க்ரைம் போலீசாரால் கைது!..
Sep 16
டிக்டாக் பிரபலம் திவ்யா சைபர் க்ரைம் போலீசாரால் கைது!..

தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை கைது செய்த தேனி சைபர் க்ரைம் போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.



தேனி அருகே உள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் சுகந்தி. டிக்டாக் செயலி இருந்த சமயத்தில் வாடிக்கையாக வீடியோக்களை வெளியிட்டு வந்து பிரபலம் அடைந்த இவர், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இவரைப் போலவே டிக்டாக்கில் பிரபலம் அடைந்தவர் தான் தஞ்சாவூரைச் சேர்ந்த திவ்யா. டிக்டாக் செயலியை முடக்கிய பின் யூடியூப் சேனல் மூலம் திவ்யா வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இவர் பதிவு செய்யும் வீடியோக்கள் பெரும்பாலும் ஆபாசமாகவே இருக்கும். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த திவ்யாவிற்கும் சுகந்திக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாகவே மோதல் இருந்து வந்தது. இந்த மோதல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு வரை சென்றது.



கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாகலாபுரத்தைச் சேர்ந்த சுகந்தி, சமூக வலைதளத்தில் திவ்யா என்ற பெண் தன்னையும் தன் குடும்பத்தினரைம் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக புகார் அளித்ததன் அடிப்படையில் பழனிச்செட்டிபட்டி காவல் துறையினர் திவ்யா மீது வழக்குப்பதிவு செய்தனர். சுகந்தி கடந்த மாதம் 8 ஆம் தேதி திவ்யா சமூக வலைதளத்தில் தன்னை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டதாக தேனி சைபர் க்ரைம் போலீசாரிடம் மீண்டும் புகார் மனு அளித்தார். அந்த புகார் மனு மீது விசாரணையை துவங்கிய சைபர் க்ரைம் போலீசார் திவ்யாவை பிடிப்பதற்கு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.



இதனை அறிந்த திவ்யா தேனி போலீசார், தன்னை தேடுவதாக, யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுவிட்டு, ஊர் ஊராக சுற்றிவந்தார். சைபர் க்ரைம் போலீசார் திவ்யாவின் தொலைபேசி எண்ணை டிராக் செய்து, அவர் சென்ற தஞ்சாவூர், சென்னை, வடலூர், பான்டிச்சேரி ஆகிய பகுதிகளில் தீவிரமாக தேடி வந்தனர். இறுதியாக நேற்று இரவு நாகப்பட்டினத்தில் சுற்றித் திரிந்த திவ்யாவை கைது செய்தனர். அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct02

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நி

Mar29

பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியான

Jun10

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த

Mar07

உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாண

May27

மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த பிரபாத் யாதவ் (33) என்ற இள

Mar29

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா

Jan03

ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்

Feb02

பாம்பு பிடி மன்னரான வாவா சுரேஷ் பாம்பு பிடிக்கையில், ப

Feb27

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந

Feb02

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி

Sep26

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த

Oct13

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண

Apr13

அரசு ஊழியர்கள் மற்றும் மந்திரிகள் மீதான ஊழல் புகார்கள

Aug11
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 02 (02:04 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Mar 02 (02:04 am )
Testing centres