உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நிச்சயமாக நிரூபிப்போம் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. தேர்தலை சந்திக்க ஆளுங்கட்சியான திமுக தீவிரமாக களம் இறங்கியுள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுகவினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் அதிமுகவும் தேர்தலை சந்திக்கும் வகையில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இந்நிலையில் வர உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக விஜயகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேமுதிக துவங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து 17ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற உள்ளாட்சி தேர்தலில், அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் தேமுதிக பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந
வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் விவசாய சட்டங்கள்
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருக
பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியான
கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு திடீரெ
70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அ
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்கள
மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப
பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலு
புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கலை தொடர
திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்க