More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • உத்தர பிரதேசத்தை இயக்கிய குண்டர்கள் ஜெயிலில் உள்ளனர் - பிரதமர் மோடி!
உத்தர பிரதேசத்தை இயக்கிய குண்டர்கள் ஜெயிலில் உள்ளனர் - பிரதமர் மோடி!
Sep 15
உத்தர பிரதேசத்தை இயக்கிய குண்டர்கள் ஜெயிலில் உள்ளனர் - பிரதமர் மோடி!

உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப்சிங் பெயரில் புதிய பல்கலைக்கழகம் நிறுவப்படுகிறது. அலிகாரில் உள்ள லோதா கிராமத்தில் 92 ஏக்கர் பரப்பளவில் இப்பல்கலைக்கழகம் கட்டப்படுகிறது. 395 கல்லூரிகள் இதனுடன் இணைக்கப்படுகின்றன. நேற்று பிரதமர் மோடி பங்கேற்று, புதிய பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். 



மேலும், அலிகாரில் அமைக்கப்பட்டு வரும் பாதுகாப்பு தொழில் வழித்தடம் தொடர்பான கண்காட்சியையும் பார்வையிட்டார். அதன்பின், பிரதமர் மோடி பேசியதாவது



2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, உத்தர பிரதேசத்தைக் குண்டர்களும், மாபியாக்களும் இயக்கி வந்தனர். யோகி ஆதித்யநாத் வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது. அந்த நபர்கள் தற்போது ஜெயிலில் உள்ளனர். அதுபோல், முன்பெல்லாம் ஏழைகளுக்கான நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர். இப்போது அந்த முட்டுக்கட்டைகள் இல்லாததால் திட்டங்களின் பலன்கள் உரியவரை சென்றடைகின்றன.



முன்பெல்லாம், பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. தற்போது, பாதுகாப்பு தளவாடங்களை அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக உயர்ந்துள்ளது. நவீன கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், டிரோன்கள் ஆகியவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார்.



விழாவில் கவர்னர் ஆனந்திபென் படேல், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



சுதந்திரப் போராட்ட வீரரான ராஜா மகேந்திர பிரதாப்சிங், மேற்கு உத்தர பிரதேசத்தில் மிகுந்த செல்வாக்குள்ள ஜாட் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். வேளாண் சட்டங்கள் தொடர்பாக அந்த இனத்தினர், பா.ஜ.க. மீது அதிருப்தியில் உள்ளனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அவர்களின் அதிருப்தியைப் போக்குவதற்காக ராஜா மகேந்திர பிரதாப்சிங் பெயரில் யோகி ஆதித்யநாத் அரசு பல்கலைக்கழகம் அமைப்பதாகக் கருதப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா

Sep04

வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம

Mar29

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80),

Jun29

நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள&nbs

Mar25

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள 

கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ

Sep08

டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு

Aug24

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு நாளை (புதன்கிழமை) பிறந

Jul19

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு 3 பாராளுமன்ற கூட

Aug27

இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏரா

Nov12

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை

Jul07

மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ

Sep28

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசா

Sep19

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ

Sep19

இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாத

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (15:31 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (15:31 pm )
Testing centres