கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து மண்டல காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்க அங்கி கொண்டு செல்லப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ‘வள்ள சத்யா’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பாரம்பரிய படகுகளில் பக்தர்கள் பம்பை ஆறு வழியாக கோயிலுக்கு செல்வார்கள். கடுமையாக விரதமிருக்கும் பக்தர்கள் மட்டுமே இப்படகில் செல்ல முடியும். இது ‘பள்ளி ஓடம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் படகில் ஏறுவதற்கு பெண்களுக்கு அனுமதி கிடையாது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாள டி.வி நடிகை நிமிஷா இப்படகில் ஏறி போட்டோ ஷூட் நடத்தினார். காலில் ஷூ மற்றும் ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட் அணிந்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நிமிஷா, தனக்கு இதன் பாரம்பரிய பெருமை தெரியாது என்று கூறி மன்னிப்பு கேட்டார். இதற்கிடையே மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி, ஆரன்முளா கோயில் நிர்வாகிகள் ஆரன்முளா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் நிமிஷா மற்றும் அவருக்கு உதவி செய்த உன்னி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பிறகு விசாரணைக்காக நிமிஷா, உன்னி இருவரும் ஆரன்முளா போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். விசாரணைக்குப் பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு ஜாமீனில் விடுவித்தனர்.
நாம் இருவர் நமக்கு இருவர் இந்த சீரியல் ரசிகர்கள் மத
தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவ
ஹாரிஷ் இசையில் கடைசியாக வெளியான படம் காப்பான். சூர்யா
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என
வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல்
உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வர
தமிழ் சினிமாவில் சின்ன வயது முதல் நடித்து பிரபலமானவர்
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தி
இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந
சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக
பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் பல மாதங்கள் கழித்த
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான படம் போ
சில நேரங்களில் தன்னுடைய நடிப்பில் வெளியாகிய திரைப்
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி ப
