பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்களுக்குள் சீர் செய்ய முடியாது. நீண்ட கால கொள்கைத்திட்டம் செயற்படுத்தப்பட்டால் மாத்திரமே நாட்டை முன்னேற்ற முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், மத்திய வங்கியின் ஆளுநர் நியமனம் குறித்து ஊடகவியலாளர் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மத்திய வங்கி ஆளுநர் விவகாரத்தில் நபரை அடிப்படையாக கொண்ட பிரச்சினைகள் ஏதும் கிடையாது. பொருளாதார நிபுணத்துவம் கொண்டவர்கள் உரிய பதவிக்கு நியமிக்கப்படுகிறார்கள். இவ்விடயத்தில் மாற்று கருத்துகள் குறிப்பிட முடியாது.
பல்வேறு காரணிகளினால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலைமைக்கு அமைய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஓரிரு நாட்களில் சீர் செய்ய முடியாது.
நீண்டகால கொள்கை திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய செயற்திட்டம் வகுக்கப்பட வேண்டும். பொருளாதாரம், சுகாதாரம், அரசியல் என அனைத்து துறைகளையும் உள்ளிடக்கிய வகையில் பலமான கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
பொருளாதார கொள்கை ஆட்சிமாற்றத்திற்கு அமைய மாற்றமடைவதால் சிறந்த முன்னேற்றத்தை அடைய முடியாதுள்ளது. நிலையாக கொள்கை திட்டம் வகுக்காமல் நாட்டை ஒருபோதும் முன்னேற்றமுடியாது என்றார்.
நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி
நாட்டில் சுமார் 1000 தொழிற்சங்கங்கள் இன்று முதல் பணிப்ப
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்க
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடித
வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக இருவர் மரணமடைந்துள
மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் நீத
சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ம
தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி பொத்த
<
மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும்
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொரு
மன்னார் க
தனது மூத்த சகோதரனை கொடூரமாக தாக்கி கொன்ற இளைய சகோதரனை
