மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும், பூகம்பமும் தாக்கியது. இதில், 18 பேர் பலியாகினர். மெக்சிகோவில் உள்ள அகாபுல்கோ நகரத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பயங்கர பூகம்பம் தாக்கியது. ரிக்டேர் அளவில் 7.1 புள்ளியாக இது பதிவானது.
அகாபுல்கோ நகரத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் பூகம்பத்தின் மையம் இருந்தது. இதனால், கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்தன.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், குழந்தைகளுடன் அலறியடித்து வெளியே ஓடி வந்து சாலைகளில் பாதுகாப்பாக நின்றனர். இந்த பூகம்பத்தால் கட்டிடங்கள் இடிந்ததில் ஒருவர் பலியானார். ஏராளமானோர் காயமடைந்தனர்.
அதேபோல், டுலா என்ற நகரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் சப்ளை பழுதாகி நின்று விட்டது. இதனால், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 17 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மக
பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து
ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும்
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவு (Kermadec Islands) அருகே இன்று (16) க
ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டி
"நாசிசத்தின் இரத்தக்களரி மறுகட்டமைப்பை" ரஷ்யா செய
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு
உக்ரைன் பாதுகாப்பு துறையானது போர் தாக்குதலில் காயமடை
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் ம
இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலை
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த
ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில்
