மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி தான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நான் இன்று வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கிறேன். யூனியன் பிரதேச நிர்வாகம் கூறுவது போல காஷ்மீரில் இயல்புநிலை நிலவவில்லை. நான் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருப்பது, இயல்பு நிலை நிலவுவதாக நிர்வாகம் சொல்லும் பொய்யை அம்பலப்படுத்துகிறது’ என்று கூறியுள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் குறித்து கவலைப்படும் மத்திய அரசு, காஷ்மீர் மக்களுக்கு அதே உரிமைகளை நிராகரிக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீர் குப்காரில் உள்ள தனது வீட்டின் மெயின் கேட்டை மறைத்தபடி நிற்கும் பாதுகாப்பு படை வாகன படத்தையும் மெகபூபா முப்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்
பா.ம.க. நிறுவனர் டாக்டர்
தமிழக முதல்வர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடிய சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போதுதான் தணிய தொடங ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப பாகிஸ்தானின் 23-வது பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-ந சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவ தமிழக விளையாட்டு வீரர்கள் 15 பேருக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்த கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ள கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு த
