ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். ஆனால் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய கிளர்ச்சி குழுவினர் மட்டும் தலிபான்களுக்கு அடிபணியாமல் சண்டையிட்டு வருகிறார்கள். அந்த மாகாணத்தை சுற்றி வளைத்த தலிபான்கள் தேசிய கிளர்ச்சி குழுவை ஒடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றி விட்டதாக தலிபான்கள் அறிவித்தனர். ஆனால் அதை எதிர்ப்பு படையினர் திட்டவட்டமாக மறுத்தனர். தாங்கள் தொடர்ந்து சண்டையிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் தலிபான்கள் 600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் பஞ்ச்ஷிர் மாகாணத்தின் தலைநகருக்குள் நுழைந்துவிட்டதாக தலிபான்கள் இன்று கூறி உள்ளனர். மாகாண தலைநகர் பஜாரக்கை ஒட்டிய ருக்கா காவல் தலைமையகம் மற்றும் மாவட்ட மையம் தங்கள் வசம் வந்துவிட்டதாகவும், எதிர் படைகள் ஏராளமான உயிரிழப்புகளைச் சந்தித்ததாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பஜாரக்கில் தொடர்ந்து சண்டை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழ
உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடா
கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன் தலைநகர் போர்ட
லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்ட
உக்ரைனில் பொதுமக்கள் பதுங்கியிருந்த பாடசாலை ஒன்றில்
வடக்கு ஆப்கானிஸ்தானில் நுழைந்து தலிபான் தீவிரவாத படை
தினந்தோறும் ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை சேமிப
சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாத
ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு
