உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் உச்சபட்ச பலனை பெற்றுக்கொள்வதற்கு தற்போதிருந்தே தயாராக வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து, சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மொனராகலை – சிறிகலவில் அமைக்கப்பட்டுள்ள ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில், அலரி மாளிகையில் இருந்து நிகழ்நிலையில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
முன்னோர்கள் பாதுகாத்த சுதேச சிகிச்சை முறைகளை அவ்வாறே எதிர்கால தலைமுறையினருக்கு பாதுகாத்து கையளிப்பது போன்றே, அதனை சர்வதேசத்திற்கும் அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பொருட்டு சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற நாட்டின் சுதேச வைத்தியர்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் என்ற ரீதியில் பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடுக்குவாதம், பக்கவாதம் போன்ற நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சுதேச வைத்திய மத்திய நிலையமொன்றை நாட்டில் உருவாக்க ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணி அரசியிலி
மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோச
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் 14 மணித்தியாலங்கள
தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
இலங்கை மத்திய வங்கி பெருந்தொகை பிணை முறிகளை விற்பனை ச
நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயார
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ
பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பால
போராட்டங்களை நடத்தி மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொல
'' நான் ஆயிஷாவின் அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்ட எதிர்
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ
இலங்கையில் பரவும் கொரோனா வைரஸ் வகையானது ஏனைய நாடுகளை
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர