தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் பயணமாக கடந்த 1-ம் தேதி டெல்லி சென்றார். நேற்று முன்தினம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அலுவலகத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்றார்.
இந்நிலையில், நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் கொடுத்தார்.
அதில் தெலுங்கானாவில் மாவட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் மாநிலத்துக்கான ஐ.பி.எஸ். அதிகாரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், கூடுதலாக 21 நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் சாலை அமைப்பதற்கான நிதிச்சுமையை மத்திய அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவற்றை அமைக்க வேண்டும், வாரங்கல் ஜவுளி பூங்காவுக்கு ரூ.1,000 கோடி மானிய உதவி அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் அந்த மனுவில் இடம்பெற்றுள்ளன.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்கள
இந்தியா கடந்த 1947 ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திரம் அடைந்தது. இ
இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா்
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறி
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழி
மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோ
ஆளும் கட்சி அராஜகம் செய்யாமல் நேர்மையான தேர்தலை நடத்த
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
திமுக தலைவராக தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாக
திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக