நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து ஆராய்வதற்காக கொவிட்-19 பரவல் தடுப்பு செயலணி இன்று கூடவுள்ளது.
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரையில் அமுலில் இருக்குமென முன்னர் அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிப்பதனால் சிறந்த பெறுபேற்றை பெற முடியும் என இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளேவும் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது போக்குவரத்து சேவைகளை முன்னர் காணப்பட்ட வகையில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடித்தாலும் மாகாணங்களுக்கு உட்பட்டு பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும்.
எவ்வாறாயினும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடித்தால் பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறமாட்டாதென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீள அமுல்படுத்த வேண்
நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தி
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் வசதி தொடர்பில் பாராளு
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று வீடு வாடகைக்கு த
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள
நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன
இந்த வருடத்தின் முதலிரண்டு வாரங்களில் 39,172 சுற்றுலாப் ப
சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள
கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு
தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்த
குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர
எட்டு வயது சிறுமியொருவரை சுமார் 2 மாதங்களாக பாலியல் து
நீண்ட நாட்களாக ஒத்தி வைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமி
