சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதன்பின்னர் ‘மகளிர் மட்டும்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’, ‘பொன்மகள் வந்தாள்’ என அடுத்தடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்தார். இந்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்தன.
தற்போது இவர் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இதுவரை எந்த சமூக வலைதளங்களையும் பயன்படுத்தாமல் இருந்து வந்த நடிகை ஜோதிகா, தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். தனது முதல் பதிவாக மலை உச்சியில் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜோதிகா, அது சுதந்திர தினத்தன்று இமயமலையில் மலையேற்றம் சென்றபோது எடுத்த புகைப்படம் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுவரை நடிகை ஜோதிகாவை இன்ஸ்டாகிராமில் 1.2 மில்லியன் இணையவாசிகள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

நடிகர் அஜித்தின் மகள் மற்றும் மகன் புகைப்படங்கள்
நடிகை சினேகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெல
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா
பாக்கியலட்சுமி தொடரில் செழியன் ரோலில் இருந்து நடிகர்
நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் க
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தல
பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்வாகிவிட்ட
பிரியங்கா “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு
விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அதை யோகி பாப
சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் ஹிட்டாக ஓடிய ஒரு நிகழ்
விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப
நடிகர் சிம்பு தனது வருங்கால மனைவியை தெரிவு செய்துவிட்
