களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கணவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற 6 சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
55 வயதான தனது கணவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி ரஞ்ஜினி எதுத்சூரிய என்பவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனது கணவனின் தலையில் மேற்கொள்ளப்பட்ட மிக கொடூரமான தாக்குதலில் படுகாயமடைந்தவர் 18ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
கணவர் சம்பவ தினத்திற்கு முதல் நாள் கல்பாத்த, பருவபொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நிலையில் அன்றைய தினம் இரவு 12 மணியளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இதன் போது சிலர் தன் முன்னிலையில் கணவனை கொடூரமாக தாக்கியதாகவும் ஒருவர் அவரது கழுத்தை நெறித்ததாகவும் மனைவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை அடையாளம் காட்டியுள்ள நிலையில் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெக
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரத
யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் ஜூன் மாத ஆர
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் வ
உன்னத பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ர
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங
இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் ஒரு பிரதேசம் தன
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பக
கண்டி - முல்கம்பொல, மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (26) ர
வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு
2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்ற
எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதியின் பின்னர் நாட்டை தொட
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியு
