வடக்கு மாகாண சபையின் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இன்று முதல் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் வழங்கப்படவுள்ள இந்த இடமாற்ற உத்தரவுக்கமைய தற்போதைய கல்வி, சுகாதாரம், பேரவை, உள்ளூராட்சி மற்றும் ஆளுநர் செயலக செயலாளர்களே இடமாற்றப்படுகின்றனர்.
அதன்படி சுகாதார அமைச்சின் செயலாளர் செந்தில்நந்தனன் மாகாண சபை பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநரின் செயலாளர் சரஸ்வதி மோகநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோ உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவுள்ள வரதீஸ்வரன் கல்வி அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
பேரவை செயலாளர் குகநாதன் பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை, பதில் பிரதி பிரதம செயலாளராகவும் பணியாற்றி வந்த, பற்றிக் ரஞ்சன் உள்ளூராட்சி திணைக்களத்தின் ஆணையாளராகச் செயற்படுவார்.
ஆளுநரின் செயலாளராகத் தற்போது பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கான அறிவித்தல் நேற்று (19) மாலைய தொலைநகல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத
60 விதமான மருந்துகளின் விலையை 40 வீதத்தால் அதிகரிக்கப்ப
கொழும்பில் நேற்றைய தினம் வெவ்வேறு பகுதிகளில் மூன்று ச
கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு
சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிந்தபோத
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக
முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 08 அமைச்
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைய
நடைமுறைப்படுத்தவிருந்த ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்ற
'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்க
தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப
நாடாளுமன்றத்தில் கட்டடத் தொகுதியில் நேற்று செய்தி சே
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்