More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன்
யாழ்ப்பாணத்தை   சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன்
Jan 19
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன்

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்பின் சூத்திரதாரி என குற்றஞ்சாட்டப்படும் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழகசெய்திகள் தொிவிக்கின்றன.



சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாதகல் பகுதியை சேர்ந்த மாதகல் மதன் என்ற புனை பெயருடைய 44 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகபர் வேதாரணியம் - செம்போடை பகுதியில் நேற்றுமுன்தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புதுறையின் கண்காணிப்பு மற்றும் தேடுதலில் இருந்த நிலையில் சந்தேக நபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார் . 2021 அக்டோர் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு கஞ்சாகடத்திய விவகாரத்தில் இவர் தமிழகத்தில் தேட்பட்டுவந்த நிலையில், தமிழக பொலிஸாருக்கு போக்குகாட்டி 2 மாதங்கள் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் கைதானார்.



அதேசயம் சந்தேகநபர், 2012ம் ஆண்டு தமிழகத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதாகி சுமார் ஒன்றரை வருடங்களாக சிறைத்தண்டணை அனுபவித்த பின்னர் 2013ம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையானவர் என கூறப்படுகிறது.



மீண்டும் விமானம் மூலம் நாடு திரும்பிய குறித்த நபர் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோதும், மீளவும் கடத்தலில் ஈடுபடுகின்றார் என்ற கோணத்தில் பாதுகாப்பு பிரிவின்  கண்காணிப்பில் இருந்தார்.இந்நிலையில் மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்த குறித்த நபர் 2021 அக்டோபர் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு கஞ்சா கடத்த முயற்சித்ததாக கூறப்படுகின்றது.



சந்தேகநபர் தமிழகத்தில் பிறிதொரு இடத்தில் கஞ்சா பெற்றுகடல்மார்க்கமாக வேதாரண்யம் பகுதிக்கு வந்த இலங்கை கடத்தல் குழுவின் படகிலிருந்து அவர் இறங்கியதுடன், 3 மூடை கஞ்சாவையும் இறக்கியதுடன், மிகுதி கஞ்சாவுடன் சென்ற ராஜன் என்ற மயிலிட்டியை சேர்ந்த நபரும், சாகுல் என்ற மட்டக்களப்பை சேர்ந்த நபரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மதன் கொண்டு சென்றதாக கூறப்பட்ட கஞ்சா புஸ்பவனம் பகுதியில் கைப்பற்றப்பட்டபோது அவர் தலைமறைவானார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேதாரண்யம் - செம்போடை கிராமத்தில் கைது செய்யப்பட்டு தற்போது சைதாப்பேட்டை உப சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு  தகவல்கள் மேலும் கூறுகின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழ

Jun19

அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னண

May03

காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில்

May26

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு க

Feb02

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாள

Mar27

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ

Feb25

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் சுகாதாரப்

Oct25

வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை

Feb23

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டிற்கு தாக்குத

Jul18

கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்

Jan22

கலைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விப

Feb03

நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்

Mar09

நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் 4 வருட கடூழிய சிறை

Mar18

சாவகச்சேரியில் திருமணமான 3 மாதத்திலேயே இளம் பெண்ணொருவ

May31

புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்க

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (15:46 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (15:46 pm )
Testing centres