கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது.
அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3,000 மெற்றிக் டன் டீசல் வழங்கப்பட்டதுடன், இனி டொலர்கள் இன்றி அவ்வாறு எரிபொருளை வழங்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மின்சார சபை டொலர்களை வழங்கினால், மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்து வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால், வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இல்லாவிட்டால் இரண்டு மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமென்றும், வாகன சாரதிகளால் அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது என்றும் வலுசக்தி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான முடிவு எடுக்கப்படுமாக இருந்தால் மக்கள் பாரிய நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சி
இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கை
நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்க
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒருமுறையா
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இ
இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்
நாட்டில் இன்றைய தினமும்(8.03) சில வலயங்களுக்கு ஏழரை மணிநே
பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம்
கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தா
தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்த