பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
களுத்துறை, நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தேசிய சுகாதார நிறுவகத்தின் பணிப்பாளர் தமர களுபோவில தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை, வெதகொடலந்த பிரதேசத்தில் சிறிய குடிசையில் வசித்து வந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
சுமார் 45 நாட்களுக்கு முன்னர், நள்ளிரவில், குடிசைக்குள் புகுந்த நரி, உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கால்களின் குதிகால் பகுதியைக் கடித்து சென்றுள்ளது. எனினும் அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என வைத்தியர் தமர களுபோவில கூறியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 9ஆம் திகதி அவருக்கு வெறிநோய் அறிகுறிகள் தோன்றியதாகவும், அவரது இரு மகன்களும் அவரை களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், மறுநாள் அவர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, பேருவளை வளதர வெதகொட பிரதேசத்தில் நரி, நாய் கடிக்கு உள்ளானவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் எனவும் வளர்ப்பு நாய்கள் இருந்தால் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர் தமர களுபோவில தெரிவித்தார்
கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289
மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற்
அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8
தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார வி
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை
வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்த
இன்று முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்க
நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கி
நாளையும் புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின
73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள், அரச மற்றும
நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்
இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஒரு மில்லியன் மக்களில்
உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்து வரும் சுதேச மற்றும்
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற