பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹாம்கான்.நேற்று இரவு இவர் மருமகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம மனிதர்கள் காரை துப்பாக்கி முனையில் மறித்தனர். பின்னர் அவர்கள் எனது காரை நோக்கி துப்பாக்கியால்சுட்டு தன்னை மிரட்டியதாக ரெஹாம்கான் குற்றம் சாட்டி உள்ளார். பின்னர் அவர் வேறு காரில் சென்றார்.
அவர்கள் யார்? என்று தெரியவிலலை. எதற்காக பின்தொடர்ந்து வந்தார்கள் என்றும் தெரியவில்லை. இது குறித்து ரெஹாம்கான் கூறும்போது, ‘இது இம்ரான்கான் ஆட்சியின் கீழ் பாகிஸ்தான் கோழைகள், குண்டர்கள் மற்றும் பேராசைகாரர்கள் நாடாக மாறி விட்டது’ என்று கூறினார்.
முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளரும், பத்திரிகையாளருமாக இருந்து வந்த ரெஹாம்கான் கடந்த 2014-ம் ஆண்டு இம்ரான்கானை திருமணம் செய்தார். அடுத்த ஆண்டு அவர்கள் பிரிந்து விட்டனர்.
தற்போது 48 வயதான அவர் தனது முன்னாள் கணவரான பிரதமர் இம்ரான்கானை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியா மற்றும் ஆப்ரிக்கா முழுவதும் துறைமுகங்கள் மற்று
சமீபத்திய ப்ளூம்பெர்க் கொவிட்-19 பின்னடைவு தரவரிசைப்ப
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர
உக்ரைன் - ரஷியா இடையேயான போர் ஐந்து நாட்களை தாண்டி நீ
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எட்டு மில்லியன் பைச
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹா
நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 ராண
மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்ட
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர்
பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொ
தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர்
இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
