ஜம்மு- காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படை வீரரை இந்திய ராணுவத்தினர் சுட்டு கொன்றனர்.
இது குறித்து ராணுவ காலாட்படை பிரிவு மேஜர் ஜெனரல் பென்தர்கர் கூறியது:-
காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிரன் செக்டார் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர், ஊடுருவ முயன்றார். இந்திய பாதுகாப்பு படையினர் அந்த வீரர் மீது நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவர் குறித்து ஆராய்ந்தபோது, உயிரிழந்த வீரர் முகமது ஷபீர் மாலிக் என தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து ஏகே ரக துப்பாக்கி, வெடிமருந்து, கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது. ஹாட்லைன் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினரை தொடர்பு கொண்டு உடலை பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளோம்.

காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களி
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல
உக்ரைனுக்குள் ஊடுருவியுள்ள ரஷ்ய வீரர்கள் சிலர், வயது
தெற்கு உக்ரைனில் இருந்து சபோரிஜியா வரையுள்ள பகுதிகளி
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
இட்டோபிகோக்கில் தெய்வாதினமாக ரயில் விபத்திலிருந்து
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்
ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்
சீன நாடு தனியாக டியான்காங் என்ற பெயரில் விண்வெளி நிலை
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதி
எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத
இணைய வழித் தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பதால் அமெரி
உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்
ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது ந
