சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.
நாளை கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
வருகிற 1-ந் தேதி கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மற்ற கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
2-ந்தேதி கடலோர மாவட்டங்களிலும், 3-ந்தேதி தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் 3-ந் தேதி வரை குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேருக்கு மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவ கோவையில் காதல் திருமணம் செய்த ஜோடியை பெற்றோர் நடுரோட் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசிய மத்திய அரசின் தடுப்பூசி உத்தியானது, மோசமான தோல்வியை க சேலம் உ சசிகலா த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற
