விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
து.பா.சரவணனின் 'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு விஷால், தனது 32வது படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை விஷாலின் நண்பர்களான ரமணா மற்றும் நந்தா ஆகியோரது ராணா பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் தயாராகிறது.
இதையடுத்த விஷாலுக்கு ஜோடியாக 8 ஆண்டுகளுக்கு பிறகு சுனைனா நடிக்கிறார். சி.எஸ்.சாம் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்திற்கு ஏ.வினோத்குமார் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இதற்கு அமைய தற்போது படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் கடைசி நாளில் 24 மணி நேரம் முழுக்க படப்பிடிப்பு நடாத்தியுள்ளாராம். படத்தின் 3-வது கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ஹைதராபாத் செல்கின்றனர். அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளாராம். படம் முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம் பெறுகிறது. பீட்டர் ஹெய்ன் இந்தப் படத்திற்கு ஸ்டண்ட் கோரியோகிராப் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக
லோகேஷ் கனகராஜ் இப்போது வெற்றியின் உச்சத்தில் சந்தோஷத
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின
ஹேஷ்டேக் தினமான இன்று, இந்தியளவில் இந்தாண்டு ஜனவரி 1 மு
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்
விஜய்யில் ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை
இசைஞானி இளையராஜா தற்போது துபாயில் நடந்துவரும் எக்ஸ்ப
ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிக
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலைய
நடிகர் ரஜினியின் மனைவி லதா, இசையமைப்பாளர் அனிருத் மீத
பிக் பாஸ் 6ல் ஜிபி முத்து தான் தற்போது அதிக அளவு ரசிகர்
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந
