இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் குழுவிற்கு உயிர்காப்பு பயிற்சிப் பாடநெறி அண்மையில் வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணம், காரைநகரில் அமைந்துள்ள எலார கடற்படை முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று கலந்துகொண்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 வார கால உயிர்காப்பு பயிற்சியில் கலந்துகொண்டு பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் வழங்கி வைத்தனர்.
கடற்படை சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, கடற்படையின் வடக்கு கடற்படைக் கட்டளையகம் 2021/01 மற்றும் 2021/02 ஆம் ஆண்டுக்கான லைஃப் வெண்கலப் பதக்கப் பயிற்சியை நடத்தியது.
இதனையடுத்து,கடற்படையின் விரைவு மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவின் உதவியுடன் இலங்கையின் உயிர்காப்பு மற்றும் நார்த்விண்ட் திட்டங்களுடன் இணைந்து கடற்படை இந்த உயிர்காப்பு பாடத்திட்டத்தை ஏற்பாடு செய்தது.
மேலும் பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் இந்த நிகழ்வு, சுகாதார வழிகாட்டுதலுக்கமைய இடம்பெற்றதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு ம
” TikTok ” மற்றும் 'ஒன்லைன் கேம்' ஆகியவற்றுக்கு அடிம
இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து
சந்தைகளில் தற்போது சகல ரக அரிசிகளின் விலைகளும் அதிகரி
யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளனத்தில் நம்பிக்கையுடன் இணைந
கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ
கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண்
சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை&n
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியை பிரத
மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் டெல்டா கொவிட் வைரஸ் த
பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய
உன்னத பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ர
நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து
