நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது.
இது தொடர்பாக பல மாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசிலும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது புகார் அளித்தனர்.
இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சை தொடர்பாக இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ஒரு காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்துக் கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995-ம் ஆண்டை பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கம்.
ஜெய்பீம் திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை.
மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை
குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரை
இசைஞானி இளையராஜா தற்போது துபாயில் நடந்துவரும் எக்ஸ்ப
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தள
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை
நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்க
விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என
வசூல் செய்ததாக சொல்லப்பட்ட பிகில்.!
நடிகர் விஜய்
அஜித்தின் வலிமை ரிலீஸ் முடிந்துவிட்டது, அடுத்து என்ன
பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வ
