நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது.
இது தொடர்பாக பல மாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசிலும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது புகார் அளித்தனர்.
இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சை தொடர்பாக இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ஒரு காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்துக் கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995-ம் ஆண்டை பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கம்.
ஜெய்பீம் திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை.
மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி
ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேய
பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஆதிபுருஷ் திரைப்படத்தின
பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக உர
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னிந்தியாவின் பி
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகப்பெரிய எத
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலங்களாக இருப்பத
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரு
சென்னை:
நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் க
பட்டாஸ் பட நடிகை Mehreen pirzada-வின் லேட்டஸ்ட் கலக்கல் க்ளிக்ஸ
நடிகர் அருள்நிதி, ரமேஷ் திலக் லீட் கதாபாத்திரங்களி நட