நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதேபோல், குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து இந்த காட்சி மாற்றப்பட்டது.
இது தொடர்பாக பல மாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசிலும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா மீது புகார் அளித்தனர்.
இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சை தொடர்பாக இயக்குனர் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
ஜெய்பீம் திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. ஒரு காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்துக் கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995-ம் ஆண்டை பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கம்.
ஜெய்பீம் திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை.
மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

பொன்ராம் இயக்கத்தில்
கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவக
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென
சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வல
பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. அழ
பாடகர் மனோ தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத பல பாட
லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட்
தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய டூயட் திரைப்படத்தில் ந
சினிமா துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது. தொடர்
த்மிழ் சினிமாவில் முதன்மை நடிகரகளாக வலம் வருபவர் விஜய
திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்கள
தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண
