இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டத்துக்கு இதன்போது பிரான்ஸ் தூதுவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார் என்று இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி செயற்திட்டத்தினூடாகவும், அமைச்சின் ஊடாகவும் சிறு நடுத்தர பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் அமைச்சரின் பரிந்துரைக்கு அமைய பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் செயற்றிட்ட அறிக்கை கையளித்துள்ளார்.
இதன்மூலம் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறு நடுத்தர உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு சுற்றுலா மற்றும் முதலீட்டு துறைக்கு பிரான்ஸ் அரசு நேரடிப் பங்களிப்பை வழங்கும் என்று பிரான்ஸ் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜீ, குமாரசிறி, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் மொஹமட் காதர், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, இ.தொ.காவின் கொழும்பு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரகு இந்திரகுமார் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்த
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள
ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்த
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்க
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழ
நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புப
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வ
இலங்கைக்கு சிமெந்து இறக்குமதி செய்து வந்த சுமார் 35 நிற
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்த
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச
யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்தி
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத