14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கோதாவில் குதிக்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.
நாளை மறுநாள் (11-ம் தேதி) சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளிப்பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடங்களைப் பெற்ற பெங்களூரு, கொல்கத்தா அணிகள் சந்திக்கின்றன. இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்றில் 13-ம் தேதி மோதும். இறுதிப்போட்டி வரும் 15-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெ
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்
ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த
மேலும் மூன்று இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியாவிற்கு அழ
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒ
டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க
சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற
டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்த
ஆஸ்திரேலியா வீரரான ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடரு
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இடையிலான இரண்டாவது டெஸ்ட்
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்
