தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் அர்ஜுன். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை இயக்கியும் உள்ளார். தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் அர்ஜுன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சினிமாவில் பணம் இல்லாமல் பட்ட கஷ்டங்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
அவர் கூறும்போது, ‘‘தமிழ் சினிமாவில் நான் ஒரு நல்ல இடத்தில் இருந்தேன். அப்போது எனக்கே தெரியாமல் என்னுடைய சில படங்கள் தோல்வி அடைந்தன. அதன் பிறகு நானே படங்களை இயக்க ஆரம்பித்தேன். நானே தயாரிக்கவும் செய்தேன்.
அப்படி ஒரு படம் இயக்கி கொண்டு இருந்தபோது கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் பாக்கி இருந்தது. அதை படமாக்க எனது கையில் பணம் இல்லை. வீட்டை விற்று எல்லா பணத்தையும் செலவு செய்துவிட்டேன். எனது அம்மா பெங்களூருவில் இருந்த சிறிய வீட்டை விற்று எனக்கு பணம் அனுப்பி வைத்தார்” என்றார்.

பிக்பாஸ் 5வது சீசன் முடிந்த கையோடு விஜய்யில் ஆரம்பமான
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை
மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய
பாரதி கண்ணம்மா சீரியல் TRP-யில் தொடர்ந்து பல சாதனைகளை பட
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜ
தமிழ் திரை
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த
அஜித் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து வெற்றிக் கொண்டாட்
பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச
தமிழ் சினிமாவின் உச்ச ந
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பு
இயக்குனர் விக்
பிரபல ஹாலிவுட் பாடகி கேகே வியாட் 11வது முறையாக கர்ப்பமட
