தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் அர்ஜுன். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை இயக்கியும் உள்ளார். தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் அர்ஜுன் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் சினிமாவில் பணம் இல்லாமல் பட்ட கஷ்டங்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
அவர் கூறும்போது, ‘‘தமிழ் சினிமாவில் நான் ஒரு நல்ல இடத்தில் இருந்தேன். அப்போது எனக்கே தெரியாமல் என்னுடைய சில படங்கள் தோல்வி அடைந்தன. அதன் பிறகு நானே படங்களை இயக்க ஆரம்பித்தேன். நானே தயாரிக்கவும் செய்தேன்.
அப்படி ஒரு படம் இயக்கி கொண்டு இருந்தபோது கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டும் பாக்கி இருந்தது. அதை படமாக்க எனது கையில் பணம் இல்லை. வீட்டை விற்று எல்லா பணத்தையும் செலவு செய்துவிட்டேன். எனது அம்மா பெங்களூருவில் இருந்த சிறிய வீட்டை விற்று எனக்கு பணம் அனுப்பி வைத்தார்” என்றார்.

நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து
நடிகர் கமல்ஹாசன் சென்னை எல்டம்ஸ் சாலையில் இருக்கும் வ
‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இ
இந்திய சினிமாவில் ச
பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான
சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிப
விஜய் தொலைக்காட்சியின் மாபெரும்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா
கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் பிரபாஸ் இணையும்
நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்க
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக
மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர
நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ர
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், ந
