பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கேப்டன் அமரிந்தர் சிங் முதலமைச்சராகவும், முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சித்து காங்கிரஸ் கட்சியின் அம்மாநில தலைவராகவும் இருந்து வந்தனர். இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அமரிந்தர் சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிலையில், திடீரென சித்துவும் கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா இன்னும் ஏற்கப்படாமல் உள்ளது. அதேவேளையில் சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
நேற்றிரவு நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் சரண்ஜித் சிங்கை சந்தித்து பேசினார். இருவருக்கும் இடையிலான சந்தித்து சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இந்த நிலையில் சித்து காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்பட இருப்பதாகவும், பஞ்சாப் அரசு முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது இந்த குழுவிடம் ஆலோசனை நடத்தும் என்றும் கட்சி வட்டாரங்களில் இருந்து செய்தி கசிந்துள்ளது. அந்த குழுவில் முதல்வர், சித்து மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமா
75-வது சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் எர்பைய
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால்
தமிழக முதல்-அமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர
இந்தியாவின் சொத்துகளை நட்பு முதலாளிகளிடம் விற்பனை செ
தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.
கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகி உள்ளது. கடலூர் அரச
கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில
நாய்களின் மோப்ப சக்தி நம்முடைய கற்பனைக்கு எட்டாத ஒன்ற
மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துற
