இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில் உருவாகி வருகிறது. இதற்கான கட்டுமான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 26 ஆம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார். சுமார் ஒரு மணி நேரம் அங்கிருந்த பிரதமர் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அமெரிக்க சுற்று பயணத்தை தொடர்ந்து அவசர அவசரமாக கட்டுமான பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடியின் செயலை எதிர்கட்சிகள் கடுமையாக சாடின. இதனிடையே இயக்குனர் அவினாஷ் தாஸ் 'நாளைய புகைப்படம்' எனும் தலைப்பில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டார்.
புகைப்படத்தில் பிரதமர் மோடி உயரமாக நிற்பதும், அவரின் எதிரே புகைப்பட கலைஞர் தரையில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுக்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இதே புகைப்படத்தை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்தது. சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்களை செப்டம்பர் 26 ஆம் தேதி தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இதே புகைப்படங்களை மத்திய மந்திரி பியூஷ் கோயலும் பதிவிட்டார்.
இவற்றில் பிரதமர் மோடி மட்டுமே காணப்படுகிறார். அந்த வகையில் வைரல் புகைப்படங்கள் இணைய விஷமிகளால் மாற்றப்பட்டு இருப்பது உறுதியாகி விட்டது.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற ப
யூடியூப் சேனல்களை தொடங்கி அதன் மூலம் பிரபலமானவர் மதன்
இலங்கை வசமுள்ள படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இராம
ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி
பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பேரவைகளுக்கான
மூன்று நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உள்துற
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் இரண்
சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்
முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
ஒரு கல்லூரி மாணவியை பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத
பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை