ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீழ்த்தப்படும் பல காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று உக்ரைன் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் சில வெளியாகியுள்ளன.
உக்ரைனிலுள்ள கார்க்கிவ் என்ற நகரில் இந்த காட்சிப் பதிவாகியுள்ளது.
வல்லரசு நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ரஷ்யா, உக்ரைன் படைகளின் தாக்குதலில் தன் விமானங்களை இழந்துவருவதைக் காட்டும் காணொளிகள் வெளியானவண்ணம் உள்ளன.
தரையிலிருந்து வான் நோக்கிச் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளால் ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று தாக்கப்பட, அந்த விமானம் தீப்பிழம்புகளாகி வெடித்துச் சிதறி தரையில் விழுவதையும், அதைக் கண்ட உக்ரைன் வீரர்கள் உற்சாகக் குரல் எழுப்புவதையும் வெளியாகியுள்ள காணொளியில் காணக்கூடியதாகவுள்ளது.
மேலும், கார்க்கிவ் நகரிலுள்ள கட்டிடம் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி கமரா ஒன்றிலும், ரஷ்ய விமானம் ஒன்று இரண்டு ஏவுகணைகளால் தாக்கப்படும் காட்சி ஒன்று பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கார்க்கிவ் பகுதி கவர்னரான ஆல்யெக் சினிகுபோவ், ரஷ்யப் போர் விமானம் கார்க்கிவ் விமான பாதுகாப்புப் படைகளால் தாக்கி அழிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.
அத்துடன், கார்க்கிவ் நகரில் சுற்றிச் சுற்றி வந்து, தொடர்ந்து குண்டு வீசிக்கொண்டிருந்த ஐந்து முதல் ஏழு ரஷ்ய விமானங்களில், இந்த விமானமும் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த
ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நட
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
