முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தன்னை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதல் மந்திரி பசவராஜ் பொம்மை என்னை நேரில் சந்தித்துப் பேசினார். அவரை நான் வாழ்த்தினேன். அவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மையும், நானும் நண்பர்கள். ஒரே கட்சியில் பணியாற்றினோம். இது பசவராஜ் பொம்மைக்கு தெரியும். நல்லாட்சி நடத்துமாறு அறிவுரை கூறினேன். மாநில பிரச்சினைகளில் பசவராஜ் பொம்மைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.
எடியூரப்பாவை நீக்குமாறு நாங்கள் கோரவில்லை. பா.ஜ.க.வில் 75 வயதானவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ஆனால் எடியூரப்பாவுக்கு அதில் இருந்து விதிவிலக்கு அளித்து மேலும் 2 ஆண்டுகளில் பதவியில் தொடர அக்கட்சி மேலிடம் அனுமதி வழங்கியது. எடியூரப்பா ஆட்சியில் இருந்தபோது நாங்கள் எந்த தொந்தரவும் அளிக்கவில்லை.
கர்நாடகத்தில் எடியூரப்பாவை புறக்கணித்துவிட்டு ஆட்சியை நடத்த முடியாது. அடுத்து தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் வரவுள்ளது. அதை நாங்கள் எதிர்கொள்வோம். அதன்பிறகு சட்டசபை தேர்தல் வரும்.
சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது. பசவராஜ் பொம்மை அரசுக்கு நெருக்கடி நிலை வந்தால் ஒத்துழைப்பு வழங்க நான் தயாராக உள்ளேன் என்றார்.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் பூர்வாஞ்சல் விரைவு சாலை 341
டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில்
சென்னையில் அனைவருக்கும்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏ மதுரை ரிசர்வ் லைன்குடியிருப்பு வளாகத்தில் இதயம் டிரஸ முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம் என த உக்ரைன் நாட்டில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களை குட கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ தயாராக இருப்பதாக இ சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வதாக அறிவித குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இந்திய பல்கலைக்கழக ச தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை
