இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் பழைய குயவர்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜன்(46). இவரும் இவரது மனைவியும் ஒன்று சேர்ந்து பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
பங்குச் சந்தை குறித்த அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்துள்ள இவர் ஆலோசகராகவும் திகழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தம்பதி பங்கு சந்தையில் நல்ல லாபம் ஈட்டி வந்துள்ள நிலையில் உக்ரைன் நாட்டில் வெடிக்கும் போர் காரணத்தினால் பங்கு சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நாகராஜன் தனது மனைவியுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மனைவியின் சகோதரி பல முறை கால் செய்தும் எடுக்காததால் சந்தேகத்தின் பெயரில் நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கதவை திறக்க முடியாததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த பொழுது இருவரும் பிணமாக தொங்கியதையடுத்து அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.
இதையடுத்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து < இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு க மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 28,699 பேருக்கு கொரோனா வைர நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுப்ப மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சே இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் 100 சதவீத வாக்குப்பதி தமிழக சட்டபேரவையில் மார்ச் 18-ந் தேதி பட்ஜெட் தாக்கல் ச 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்க விவசாயிகள் நாளை தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு ம மறைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.ப
