நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யாததால் ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர்பவுன்ராஜ். இவர் இரண்டு முறை இதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானவர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி பெற்றார்.
வாக்காளர்களுக்கு முறையாக பணப்பட்டுவாடா செய்யததால் தான் தோல்வி அடைந்ததாக நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. எடக்குடி கிராமத்து மக்களுக்கு பண பட்டுவாடா செய்யச்சொல்லி ஊராட்சி மன்றதலைவர் தங்கமணியிடம் கேட்டிருக்கிறார். தேர்தல் விதிமுறைகளை காரணம்காட்டி அவர் மறுத்திருக்கிறார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்கிறார் தங்கமணி.
ஏப்ரல் -5ம் தேதி அன்று இதுகுறித்து தங்கமனி காவல் நிலையைத்தில் புகார் செய்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 23ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தினை அனுகும்படி உத்தரவிட்டார். அதன் பின்னர் மாவட்ட நீதிமன்றத்தில் தங்கமணி வழக்குக் தொடுத்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி, பூம்புகார் தொகுதியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதை அடுத்து, போலீசார் பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தைச் சேர்ந்
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இன்று மத
தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவக
வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரம் மற்ற
ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்
சென்னை: நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
