இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் விவசாய அமைப்பு என்பன தெரிவித்துள்ளன.
2023 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட பயிர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டுப் பணி அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பின்மை
கடந்த ஆண்டு ஜூன்- ஜூலையில் இருந்ததைக் காட்டிலும் 40 சதவீதம் குறைந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடைக் காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவை உணவுப் பாதுகாப்பின் முன்னேற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு முக்கிய பயிர்கள்
பெருந்தோட்டத் துறையின், சமூகங்களுக்குள்ளும், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் சமுர்த்தி போன்ற சமூக உதவித் திட்டங்களிலும் தங்கியுள்ள குடும்பங்கள் மத்தியிலும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை மிக உயர்ந்த அளவில் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
இதேவேளை 2022- 23இல் இரண்டு முக்கிய பயிர் பருவங்களில் அரிசி மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களின் உற்பத்தி 4.1 மில்லியன் தொன்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அறுவடை செய்யப்பட்ட 2022- 23 பெரும்போகப் பருவத்தில் உற்பத்தித்திறனின் 12வீத முன்னேற்றத்துக்கு இது காரணமாக இருந்தது என்றும் ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் விவசாய அமைப்பு என்பன குறிப்பிட்டுள்ளன.
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப
காவற்துறையினரால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெற
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி
நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத
கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும
தமிழினத்துக்கு கடந்த காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொல
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை
இலங்கையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின்
புறக்கோட்டை, பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்க
அங்குருவாதொட்ட - படகொட சந்தியில் நேற்று (17) இரவு இரு குழ
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்
முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மற
நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமு
2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை- இந்திய சர்வதேச பரோ குத்துச்சண